புகைப்படத்தால் நடந்த விபரீதம்., 5 நாட்களில் இரண்டு திருமணம் செய்த மென்பொருள் பொறியாளர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

26 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் மத்திய பிரதேசத்தில் ஐந்து நாட்களில் இரண்டு பெண்களை மணந்து பின்னர் தப்பிச் சென்றதாக புகார்.

மத்திய பிரதேசம் கண்ட்வாவில் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் குடும்பத்தினர் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக காவல் நிலைய ஆய்வாளர் பி.எல் மாண்ட்லோய் தெரிவித்துள்ளார்.  இந்தூர், முசாகேடி பகுதியை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், டிசம்பர் 2-ஆம் தேதி காண்ட்வாவில் ஒரு பெண்ணையும், டிசம்பர் 7-ஆம் தேதி இந்தூரில் உள்ள மோவ் என்ற இடத்தில் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தூரில் திருமண விருந்துக்குச் சென்ற காண்ட்வாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர், ஐந்து நாட்களில் முன்பு குற்றம் சாட்டப்பட்டவரின் இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்களை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, குற்றச்சாட்டப்பட்டவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காண்ட்வா பெண்ணின் குடும்பத்தினர் போலீஸ் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், குடும்பம் மணமகனுக்கு வழங்கப்பட்ட திருமணம் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக ரூ.10 லட்சம் செலவாகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர், பெண்ணை திருமணம் செய்த பின்னர், இந்தூரில் உள்ள தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு வேலைகளுக்காக அவர் போபாலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மோவ் சென்றுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளனர். டிசம்பர் 2ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரி மற்றும் பிற உறவினர்களுடன் இங்கு திருமணத்திற்கு வந்திருந்தார் கூறியுள்ளனர்.

இந்தூரில் திருமணம் செய்துகொண்ட பெண்ணுடன், காண்ட்வாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பேசியபோது, தனது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கட்டாயப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 7 க்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மென்பொருள் பொறியாளர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது தொலைபேசியும்  துண்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறியுள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளியை காவல்துறை தேடி வருவதாகவும் ககுறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

9 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago