Indian Railway [file image]
இந்தியன் ரயில்வே: இந்திய நாட்டில் இருக்கும் நாம் ரயிலை தவற விட்டு விட்டோம் என்றால் என்ன செய்யலாம்? அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதில் பலரும் சரியான நேரத்தில் ட்ரெயினை தவற விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன்? இதை படிக்கும் நீங்களும் கூட அதில் ஒருவராக இருக்கலாம். ட்ரெயினை தவறவிட்டு அந்த டிக்கெட்டுக்காக செலுத்திய பணத்தில் பாதியையும் நாம் பெற்றிருக்கலாம்.
ஆனால், நம் எல்லாருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கலாம். அது என்னவென்றால் அதே டிக்கெட்டில் அதே நாளில் மற்றொரு ரயிலில் ஏறலாமா என்று. அந்த கேள்விக்கான பதில், ஆம்! .. என்றாலும் அதற்க்கான சில விதிமுறைகளை இந்திய ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகள் என்ன? என்பதனை குறித்து தற்போது பார்ப்போம்.
கண்டிப்பாக ஏறலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே தவறவிட்ட ட்ரெயின் டிக்கெட்டை பத்திரமாக வைத்து கொண்டு, ஒரு ஜெனரல் டிக்கெட் எடுத்துவிட்டு அதே இடத்திற்கு செல்லும் அடுத்த ட்ரெயின் அல்லது அது வழியாக செல்லும் வேறொரு ட்ரைனிலோ ஏறிவிட்டு நாம் எடுத்த ஜெனரல் டிக்கெட்டை ட்ரெயின் TTR-யிடம் காண்பித்து முறையாக நடந்ததை அவரிடம் கூற வேண்டும்.
இதன் மூலம் ட்ரெயின் TTR நமக்கு அதே ட்ரைனில் நமக்கு தகுந்த ஏதேனும் ஒரு இருக்கைக்கு தருவதற்கு வாய்ப்பாக அமையும். ஆனால், நீங்கள் கண்டிப்பான முறையில் ஜெனரல் டிக்கெட் எடுத்து கொள்ளவேண்டும். நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்த (தவறவிட்ட) ட்ரெயின் டிக்கெட்டை மட்டும் காட்டினால், உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
தவற விட்டு ட்ரெயின் டிக்கெட்டின் பணத்தைத் திரும்பப் பெற, நீங்கள் டிக்கெட் டெபாசிட் ரசீதை (TDR) தாக்கல் செய்ய வேண்டும். ரயிலை தவறவிட்ட 4 மணி நேரத்திற்குள், நீங்கள் TDR ஐ பதிவு செய்ய வேண்டும் என்று IRCTC விதிமுறை கூறுகிறது.
அதன்படி, நீங்கள் நேரத்தை தாண்டி தாக்கல் செய்தால் பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள் எனவும் IRCTC விதிமுறை கூறுகிறது.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…