Categories: இந்தியா

2019 தேர்தலில் அதிகப்படியான பணத்தை காங்கிரஸ் பயன்படுத்தியதா? வெளியான பரபரப்பு தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

Congress: கடந்த 2019 தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்பு வரி கணக்கை தாமதமாக செலுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்போது, காங்கிரஸிடம் சுமார் ரூ.1,823 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை என்றும் வட்டியுடன் வரி மற்றும் அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2019 மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஏப்ரலில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிகப்படியான பணத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

2013-14 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டுகளுக்கான மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்கக் கோரிய வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, வருமான வரித்துறை தாக்கல் செய்த “satisfaction note”-இல் பல தேர்தல்களின் போது பல பண பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள் பட்டியலிட்டுள்ளது.

அதில், கடந்த மக்களவை தேர்தலில் அதிக பணம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ரூ.520 கோடி பணம் மதிப்பீட்டில் இருந்து தப்பியிருக்கலாம் என்றும் வருமான வரித்துறையிடம் கணிசமான ஆதாரங்கள் இருப்பதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், வருமான வரித்துறையிடம் உள்ள அனைத்து ஆதாரங்களும் காங்கிரஸிடம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

7 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

7 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

7 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago