மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி பெண் காவலர்கள் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டும் பணியில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் பெண் காவலர்களுக்கு நற் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெண் காவலர்களின் பணி நேரத்தை அரசு குறைத்துள்ளது. மகாராஷ்டிர மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே பிறப்பித்த உத்தரவின்படி, பெண் காவலர்கள் இனி 12 மணி நேரத்திற்குப் பதிலாக எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
பெண் காவலர்களுக்கான புதிய குறுகிய வேலை நாள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் எனவும் மகாராஷ்டிராவில் தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நேரம் 12 நேரமாக உள்ளது. இந்நிலையில், இனிமேல் மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டும் பணியில் இருக்க வேண்டும் என அம்மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை பெண்களுக்கு எட்டு மணி நேரப் பணி அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராம புறங்களில் இந்த திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர காலங்களில் பெண் காவலர்களின் பணி நேரத்தை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…