மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை – தேவேந்திர பட்னாவிஸ்

Default Image

மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை என்று மகாராஷ்டிராவின்  முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின்  முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார்  பதவி ஏற்றார்.
இதன் பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,  மகாராஷ்டிராவின் எதிர்கால நலன்கருதி தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை.விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கிலும்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கிச்சடி கூட்டணி அல்ல. நீண்ட நாள்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்