மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிசு ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி முன்பதவியேற்றனர்.
இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான நடைபெற்ற விசாரணையில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.அதாவது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இவரை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.மேலும் பாஜக-சிவசேனா கூட்டணிக்கே மகாராஷ்டிர மக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகளில் மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு கிடைத்தது.இடங்களின் எண்ணிக்கையை பார்த்த பிறகு பேரம் பேசத்தொடங்கியது சிவசேனா .சுழற்சி முறையில் முதல்வர் என எந்த வாக்குறுதியும் சிவசேனாவிற்கு அளிக்கப்படவில்லை.மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது என்று விளக்கம் அளித்தார்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…