தேவாஸ் நிறுவன வழக்கு! இழப்பீடு வழங்க கோரி நாசாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Published by
லீனா

பெங்களூரை சேர்ந்த தேவாஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2004-ம்  ஆண்டு, பெங்களூருவை தலைமையிடமாக  கொண்டு, இஸ்ரோவின் முன்னாள் அதிகாரிகள் சிலரும் மற்றும் அமெரிக்க தொழிலதிபர்கள் சிலரும் சேர்ந்து ஆரம்பித்தது தான் இந்த தேவாஸ் புத்தாக்க நிறுவனம். மொபைல் போன் நிறுவனங்களுக்கு மல்டிமீடியா சேவையை வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

இதற்காக தேவாஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இரண்டு செயற்கை கோள்களை குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தமானது, இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தால், 70 மெஹா ஹெட்ஸ் எஸ் பங்க் அலைவரிசையை, தேவாஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டி வரும் என்றும், இது பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் அலைவரிசை என்பதால் வழங்க முடியாது என்றும் ஆண்ட்ரிக்ஸ் தெரிவித்துள்ளதோடு, ஒப்பந்தத்தை  2011-ம் ஆண்டு ரத்து செய்தது.

இதனையடுத்து தேவாஸ் நிறுவனம், இந்த நடவடிக்கையை எதிர்த்தும், பின்னர் இழப்பீடு கோரியும் இந்தியாவிலும்,  அமெரிக்காவிலும்   சர்வதேச தீர்ப்பாயங்களிலும் சட்ட போராட்டத்தை நடத்தியது. இந்நிலையில், தேவாஸின் கோரிக்கையை ஏற்ற அமெரிக்க நீதிமன்றம், அண்ட்ரிக்ஸ் நிறுவனம் ரூ.9 ஆயிரம் கோடி  இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது.

தேவாஸ் – அண்ட்ரிக்ஸ் ஒப்பந்தத்தில், ரூ.578 கோடி ரூபாய் ஊழல்கள் நடந்ததாகவும், அந்நிய செலவாணி முறைகேடுகள் நடந்ததாகவும், புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக, தேவாஸ் நிர்வாக குழு தலைவராக இருந்தவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான மாதவன் நாயக் மீது சிபிஐ-ம், அமலாக்கத்துறையும் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேவாஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்த புகார்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

பதற வைத்த செயின் பறிப்பு சம்பவம்.! என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!

பதற வைத்த செயின் பறிப்பு சம்பவம்.! என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!

சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…

38 minutes ago

நெருங்கும் அதிமுக – பாஜக கூட்டணி! இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பின் ‘கார்’ ரகசியம்..,

சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…

1 hour ago

GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

மனோஜ் பாரதி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இபிஎஸ் வரை இரங்கல் செய்தி!

சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு…

10 hours ago

GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…

11 hours ago

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!

சென்னை :  இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…

12 hours ago