ஓடும் ரயிலில் 3 வயது குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக இயக்கப்பட்ட பில்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாத குழந்தைக்கு பாதுகாப்பு படைவீரரான இந்தர் சிங் என்பவர் பால் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பாலுக்காக அழுத குழந்தையின் பசியை போக்க போபால் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை காவலராக பணியாற்றும் இந்தர் சிங் யாதவிடம் உதவியை கேட்டுள்ளனர். அவரும் உடனே விரைந்து சென்று அந்த 3 மாத குழந்தைக்கு கடையில் பால் வாங்கி வந்துள்ளார். ஆனால், அதற்கு முன்பு ரயில் புறப்பட ஆரம்பித்து விட்டது. உடனே இந்தர் சிங் ஓட தொடங்கிய ரயிலுடன் ஓடி சன்னல் வழியாக குழந்தையின் அம்மாவிடம் பாலை கொடுத்துள்ளார்.
இந்தர் சிங் மனிதநேயத்துடன் செய்த இந்த காரியம் ரயில்வே நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் இந்தர் சிங்கின் இந்த செயலை பாராட்டியது மட்டுமில்லாமல் ரொக்க பரிசு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். தற்போது இந்தர் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…