உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 55 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், இவர்களிடமும் டெங்கு அறிகுறி இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை மதுரா, ஆக்ரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் 80 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் டெங்கு காய்ச்சலால் 36 குழந்தைகள் உட்பட 55 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தற்போது டெங்கு மிக அதிக அளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் குழந்தைகள் அதிகம் இருந்ததால் விமர்சனங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரோசாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…