டெல்டா வகை கொரோனா வைரஸ் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் – ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்!

Published by
Rebekal

டெல்டா வகை கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களையும் பாதிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

தற்பொழுது இந்த டெல்டா வகை உலகெங்கும் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ள நாடு முழுவதிலும் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இரண்டு தவணை தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு கூட கொரோனா தொற்று சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது. அதுவும் டெல்டா வகை கொரோனா முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் பாதிக்கும் எனவும் தற்போது ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐசிஎம்ஆர் நடத்திய ஒரு ஆய்வில், டெல்டா வகை கொரோனா, தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத நபர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த டெல்டா வகை கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களை பாதிக்கும் பொழுது உயிரிழப்பு ஏற்படாது என கூறப்படுகிறது. இந்த ஆய்வில் ஈடுபட்ட தேசிய தொற்றுநோயியல்  நிறுவனத்தின் விஞ்ஞானி ஜெரோமி தங்கராஜ் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விட தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை இந்த டெல்டா வகை கொரோனா பாதிக்கும் பொழுது உயிரிழப்பு மிக குறைவாக இருப்பதாக கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago