ஏற்றுமதி நிறுவங்களின் உரிமங்களை திருடும் பலே திருட்டு கும்பல்.! டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை.!

Published by
மணிகண்டன்

போலி தரவுகளை கொண்டு 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஏமாற்றி சுமார் 3.5 கோடி  மதிப்பிலான உரிமங்கள் பறிபோக காரணமாக இருந்த கும்பலை டெல்லி சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆடை நான்கு வெவ்வேறு ஏற்றுமதி கம்பெனிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன. அந்த புகாரின்படி, ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமங்களை திருடி, வேறு விதமான மோசடி செய்யபடுகிறது என புகாரளிக்கப்பட்டது. இந்த போலி தரவுகளை கொண்டு 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஏமாற்றி சுமார் 3.5 கோடி  மதிப்பிலான உரிமங்கள் பறிபோயுள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட டெல்லி சைபர் கிரைம் போலீசார் இதுவரை மொத்தம் 7 பேரை கைதுசெய்துள்ளனர். இந்த மோசடி கும்பலில் முக்கியமானவனாக செயல்பட்ட புனேவை சேர்ந்த ஒருவர் மத்திய பிரதேசத்தில் உள்ள பலகாட் பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் டெல்லி பகுதியில் வசித்துவந்துள்ளனர்.

இந்த கும்பலின் தொடர்பு, இந்தியா முழுவதும் பல முக்கிய வங்கி முகவர்களுடன் இருந்துள்ளது எனவும், இதுவரை 107 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கும்பலானது, முக்கிய தரவுகளை பெற போலி ஆவணங்களையும், வீடியோ கான்பிரன்சிங்கின் போது அந்தந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் போலவும் ஆள்மாறாட்ட வேலைகளில் ஈடுபட்டு நிறுவனங்கள் பற்றிய முக்கிய தரவுகளை பெற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

33 minutes ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

2 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

3 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

3 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

4 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

5 hours ago