மீண்டும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்! டெல்லி மற்றும் திருப்பதியில் தீவிர சோதனை!

Default Image

இந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.
தற்போது மீண்டும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்த முறை டெல்லியில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் ஊடுருவியதாகவும், பிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் நோவல் ஆகியோர் தான் பயங்கரவாதிகளின் குறி என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் 9 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்களை பிடித்து அவர்களிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
+

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Kerala CMO bomb threat
PUDUCHERRY'
16 Youtube channels block
TN CM MK Stalin
WhatsApp Fake news
GT Vs RR