நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் இந்தியா முழுவதிலும் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அதன் பிறகு தளர்த்தப்படும் என்று நினைத்த நிலையில், தற்போது மத்திய அரசால் மே 3ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல மக்கள் உணவின்றி வேலை வாய்ப்பு இல்லாததால் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது நாடு முழுவதிலும் தபால் துறை மூலமாக மருந்துகள், பரிசோதனை கருவிகள் ஆகியவை மருத்துவமனைக்கும் பயனர்களுக்கும் வாகனங்கள் மற்றும் விமானம் மூலமாக தபால் துறை வினியோகித்து உள்ளது என்று மத்திய உள்துறை இணை செயலாளர் புன்ய சாலியர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான தபால் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் கூறியுள்ளார். மேலும் அரசால் வழங்கப்படக் கூடிய ஓய்வூதியம் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று கிடைக்குமாறு செய்துள்ளதாகவும், மக்களுக்கு உணவுப் பொருட்கள் உணவு பொட்டலங்களை வழங்குவதையும் தபால் துறை செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…