டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதியாக உருவெடுத்துள்ளது – அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ளார்.

டெல்லி தலைமை செயலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கோடியை ஏற்றிப்பின் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது மக்களுக்கு சேவை செய்யும் போது உயிர் இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பள்ளிகள் செப்டம்பர் 27 முதல் ‘தேஷ்பக்தி’ பாடத்திட்டம் கற்பிக்கத் தொடங்கப்படும் என அறிவித்தார். இது ஒரு செயல்பாட்டு அடிப்படையிலான பாடநெறியாகும். இதில் பள்ளி குழந்தைகள், நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிப்பது, அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் தேசத்திற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கற்பிக்கப்படும் என்று கூறினார்.

நாங்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தோம், ஆனால் அவர்களுக்கு தேஷ்பக்தி கற்பிக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தேசபக்தியின் சாரத்தை கற்றுக்கொள்வார்கள். அரசின் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை பட்டியலிட்டு, டெல்லி நிர்வாகம் ஒரு முன்மாதியாக உருவெடுத்துள்ளது என குறிப்பிட்டார்.

அதன் முயற்சிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார். அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நகரம் முழுவதும் உள்ள பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் இதர இடங்களில் யோகா வகுப்புகளை அரசாங்கம் தொடங்கும் என்றார். ஏதேனும் குடியிருப்பு காலனியில் 40-50 பேர் முன் வந்தால், டெல்லி அரசு அவர்களுக்கு யோகா பயிற்சிகளை வழங்கும்.

ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர், அடுத்த முறை 70 பதக்கங்களை வெல்ல நாடு தயாராக வேண்டும் என்றார். டெல்லி அரசின் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சேர விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2047 க்குப் பிறகு டெல்லியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago