Delhi air pollution [File Image]
தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைய எட்டி வருகிறது. இதனால், மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதற்கே சிரமப்படும் அளவுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த காற்று மாசுவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிர வாகன கட்டுப்பாடு, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை, தண்ணீர் லாரி மூலம் நீர் பீய்ச்சி அடிப்பது, செயற்கை மழை பொழிவு என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்
இந்நிலையில், டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் மிக மோசமான நிலை என்ற நிலையில் இருந்து மோசமான நிலைக்கு முன்னேறியுள்ளது. மழைக்கு முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய காற்றின் தர அளவீட்டில் 407 ஆக இருந்த காற்று மாசு அளவு, தற்போது 361ஆக குறைந்துள்ளளது.
டெல்லியில் , நேற்று காலை 10 மணியளவில், மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் காற்றின் தரம் 407 ஆக இருந்தது. ஷாதிபூரில், 405 ஆக இருந்தது. சோனியா விஹார் 399, அசோக் விஹார் 390, பவானா 389, வசீர்பூர் 385, ITO மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய இரண்டும் 381 என காற்று மாசு பதிவாகி இருந்தது.
தற்போது, காற்று மாசு அளவானது, டெல்லியில் ஆனந்த் விஹார் 295, ஆர்.கே.புரம் 230, பஞ்சாபி பாக் 244, மற்றும் ITO 263 என பதிவாகி உள்ளது.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…