70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் 22 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரு இடத்தில கூட காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் வெற்றி பெறவில்லை என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், தேர்தலின் முடிவுகளில் பெருமான்மையை நிரூபித்து ஆம் ஆத்மி 3-வது முறையாக கோட்டையை கைப்பற்றியுள்ளது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வெற்றியின் மூலம் ஆம் ஆத்மி கட்சி தலைவர் 3-வது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும் வருகின்ற 16-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…