மக்களின் முயற்சியாலும், ஒத்துழைப்பாலும் டெல்லி கொரோனாவின் மூன்றாம் அலையை வென்றுவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் குறைந்து கொண்டே தான் வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக மக்கள் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இது ஆட்டின் மூன்றாவது கொரோனா அலையாக இருக்கலாம் எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் தற்பொழுது கொரோனாவின் மூன்றாம் அலை குறைந்து வருகிறது. தினமும் டெல்லியில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம், இது அமெரிக்காவை விடவும் அதிகம் என கூறிய அவர், டெல்லி மக்களின் முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் கொரோனாவின் மூன்றாம் அலையை டெல்லி வென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…