டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் உமார் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட உமார் காலித் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 முறை நீதிமன்றம் ஒத்திவைத்தது:
காலித்தின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்க கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் உத்தரவு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. உமர் காலித்தின் ஜாமீன் மீதான தீர்ப்பை மூன்றாவது முறையாக கர்கார்டூமா நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. முன்னதாக மார்ச் 14 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளிலும் ஜாமீன் மனு மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் போராட்டம்:
பிப்ரவரி 2020 கலவரத்தின் மூளையாக இருந்ததற்காக உமர் காலித் மற்றும் பலர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இந்த கலவரங்கள் ஏற்பட்டது.
எஃப்.ஐ.ஆரில் காலித் போராட்ட இடங்களில் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைச் செய்ததாகவும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையின் போது டெல்லி மக்களை வீதிக்கு வருமாறும் வேண்டுகோள் விடுத்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியது.
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…