வன்முறையில் தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மத்தியில் பல வன்முறைகள் வெடித்தது.
இந்த வன்முறையில் தலைமறைவாக உள்ள லக்கா சித்தானா வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் தனது கடைசி வீடியோவில் தீப் சிந்துவை ஆதரிக்குமாறு வலியுறுத்தினார். இதனை எதிர்த்து டெல்லி காவல்துறை விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறையில் சதிகாரர் என்று கூறப்படும் லக்கா சித்தானா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக அறிவித்துள்ளது.
லக்கா சித்தனா குறித்து காவல் துறையினர் கூறுகையில், டெலிகிராம் மற்றும் சிக்னல் பயன்பாடுகளில் வீடியோக்களை தனது ஆதரவாளர்களுக்கு அனுப்புகிறார் என்றும், பின் அதை தனது முகநூல் கணக்கிலும் பதிவேற்றுகிறார் என்று தெரிவித்துள்ளனர். இவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…