டெல்லி வன்முறை : 1820 பேர் கைது, 53 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை.!

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது எதிர்ப்பாளர்களுக்கு, ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக வெடித்தது இதனால் அப்பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்பொழுது, இதுவரை ஆயுத சட்டத்தின் கீழ் 47 வழக்குகள் உள்பட 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 1,820 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025