டெல்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதி உயிரிழப்பு !

டெல்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதியதால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். தற்போது அவர்களை சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் தனது நண்பர்களுடன் சென்ற சாஹீர் அன்சாரி என்பவர் மீது கட்டுபாட்டை இழந்து கார் மோதியதால் உயிரிழந்துள்ளார். 500கி.மீ கடந்த இவர்கள் அனைவரும் காலை உணவிற்காக சாலையோரம் இருந்த மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அப்போது தான் இந்த கார் விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த சாஹீருக்கு 3 குழந்தைகள் இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025