போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி! பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 வழக்குகள்!

Published by
மணிகண்டன்
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
  • டெல்லியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தற்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு பதியபட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசார் கல்லூரி வளாகத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஹைதிராபாத் மௌலானா அசாத் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் போராட்டம் விடிய விடிய நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ராத்திரியில் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு பின்னர் அதிகாலை விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தற்போது போராட்டத்தின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது 2 வழக்குகள் பதியபட்டுள்ளன.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago