Categories: இந்தியா

“டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..!

Published by
murugan

கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால் மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி தற்போது வரை பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். இந்த போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய சங்க அழைப்பு விட்டனர்.

நேற்று முன்தினம் விவசாயிகள் டிராக்டருடன் டெல்லியைநோக்கி புறப்பட்டனர். இதைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில எல்லை முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு விவசாயிகள் டெல்லியில் நோக்கி உள்ளே நுழையாமல் இருக்க சிமெண்ட் தடுப்புகள், இரும்பு வேலிகள் மற்றும் ஆணிகளை சாலையில் பதித்து தடுத்து வருகின்றனர்.

தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

இதையும் மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகளை டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்,  தண்ணீர் பீச்சி அடித்து  விரட்டி அடித்தனர். பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிலவும் மோதல் நிலவி வரும் நிலையில், சண்டிகரில் விவசாயத் தலைவர்களுடன் 3 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் மாலை 5 மணிக்கு  விவசாயத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே பிப்ரவரி 8 மற்றும் 12 தேதிகளில் நடந்த பேச்சு வார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் விவசாயிகள் மற்றும் மத்திய அரசுடன்  இடையிலான  மூன்றாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

 

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

40 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

44 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago