வீட்டிலேயே தனிமைப்படுத்துதலில் இருந்த நபர் ஒருவரின் பெற்றோர் உயிரிழந்த நிலையில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் அவரது பெற்றோரின் உடலை தகனம் செய்ய உதவியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தான் தற்பொழுது வைக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவின் தீவிரம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள புராரி எனும் பகுதியில் உள்ள நபர் ஒருவரின் மனைவி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.
எனவே அந்த நபர் மற்றும் அவரது பெற்றோர் ஆகிய இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்து பார்க்கும் பொழுது தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல அந்த நபரின் பெற்றோர்கள் கொரோனாவிற்கான அறிகுறிகளை கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அவரது பெற்றோர்கள் உயிரிழந்தும் உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்ததால் வெளியில் சொல்ல முடியாத அந்த மனிதன் சமூக வலைதளம் மூலம் உதவியை நாடியுள்ளான், ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் அந்த நபரது பெற்றோரை தகனம் செய்வதற்காக அவருக்கு உதவியுள்ளனர்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…