தனிமைப்படுத்துதலில் இருந்தவரின் பெற்றோரை தகனம் செய்ய உதவிய டெல்லி காவல்துறை!

Published by
Rebekal

வீட்டிலேயே தனிமைப்படுத்துதலில் இருந்த நபர் ஒருவரின் பெற்றோர் உயிரிழந்த நிலையில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் அவரது பெற்றோரின் உடலை தகனம் செய்ய உதவியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தான் தற்பொழுது வைக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவின் தீவிரம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள புராரி எனும் பகுதியில் உள்ள நபர் ஒருவரின் மனைவி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.

எனவே அந்த நபர் மற்றும் அவரது பெற்றோர் ஆகிய இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்து பார்க்கும் பொழுது தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல அந்த நபரின் பெற்றோர்கள் கொரோனாவிற்கான அறிகுறிகளை கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து அவரது பெற்றோர்கள் உயிரிழந்தும் உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்ததால் வெளியில் சொல்ல முடியாத அந்த மனிதன் சமூக வலைதளம் மூலம் உதவியை நாடியுள்ளான், ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் அந்த நபரது பெற்றோரை தகனம் செய்வதற்காக அவருக்கு உதவியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

‘எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது’ – சேவாக் ஓபன் டாக்.!

‘எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது’ – சேவாக் ஓபன் டாக்.!

டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

23 minutes ago

திருநெல்வேலி இருட்டுக்கடைக்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…

36 minutes ago

Zomato நிறுவனத்தின் பெயர் ‘Eternal’ என மாற்றம்! காரணம் என்ன.?

டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…

1 hour ago

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

11 hours ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

12 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

13 hours ago