முக்கியச் செய்திகள்

எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீராங்கனைகளை பாஜக எம்.பி  துன்புறுத்தியுள்ளார்.! டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பொறுப்பில் இருந்த போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது வீராங்கனைகள் குற்றம்சாட்டின. அவர் எம்பியாக இருப்பதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

பல்வேறு போராட்டங்களை அடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். வீராங்கனைகள் கொடுத்த புகாரின் பெயரில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி டெல்லி காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் புகார் குறித்த விசாரணையை டெல்லி காவல்துறையினர் மேற்கொண்டனர், இந்த வழக்கு தொடர்பாக மற்ற சாட்சியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 23 சனிக்கிழமை அன்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா,  பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் மல்யுத்த வீராங்கனைகளின் அமைதியை சீண்டுவதையும், அவர்களை துன்புறுத்துவதையும் செய்து வந்துள்ளார்.

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நீதிமன்றத்திற்கு முழு  அதிகாரம் உள்ளது என்றும் ஸ்ரீவஸ்தவா வாதிட்டார். இதற்கு பத்தி வாதமாக, இந்தியாவிற்கு வெளியே நடந்த வழக்குகளுக்கு CrPC இன் பிரிவு 188 இன் கீழ் அனுமதி வாங்கி தான் விசாரிக்க வேண்டும் என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு எதிராக வாதிட்ட டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, அனைத்து புகார்களும் வெளிநாடுகளில் நடந்தால் மட்டுமே சிறப்பு அனுமதி தேவை, ஆனால் இங்கே பல்வேறு புகார்கள் இந்தியாவுக்குள் நடந்தவை அதனால் அதற்கு இந்த அனுமதி தேவையில்லை என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

43 minutes ago
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

1 hour ago
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…

1 hour ago

”50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்” – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!

சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…

2 hours ago

மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ..! ‘பாக்’ வார்த்தையை நீக்கிய கடை.!

ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக்,  இனிப்புகளின் பெயர்களை…

3 hours ago

”இனி அறிக்கை விடக்கூடாது” – ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago