Categories: இந்தியா

இன்னும் ஒருசில நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம்… டெல்லி அமைச்சர் பரப்பரப்பு பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படலாம் என்று அம்மாநில அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவுமான சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி உட்பட சில மாநிலங்களில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம், மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. அவர் ஆஜராகாததில் நீதிமன்றத்தில் வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த சூழலில், தன்னை கைது செய்ய பாஜக விரும்புவதாகவும், தங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி வருவதாகவும் கெஜ்ரிவால் குற்றசாட்டியிருந்தார்.

Read More – விவசாய தலைவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து!

இதனால், சமீபத்தில் டெல்லி சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. இதுபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுற்றி பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்னும் 2, 3 நாட்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

தேசிய தலைநகர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது, அடுத்த ஒரு சில நாட்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம். அமலாக்கத்துறை மட்டுமின்றி சிபிஐயும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து பாஜகவின் பதற்றம் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்தால், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்படுவார், அவரை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரே ஒரு வழி, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் கூறி வருவதாக பரத்வாஜ் கூறியுள்ளார்.

மேலும், பரத்வாஜ் கூறியதாவது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். ஆம் ஆத்மி – காங்கிரஸும் எந்த மாநிலத்தில் கூட்டணி அமைத்தாலும், அது பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

6 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

15 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago