டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30 வரை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்காரணமாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில், 5 மாத இடைவெளிக்கு பிறகு, மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும், மெட்ரோ சேவைகள் நேற்று தொடங்கியதில் தாம் மகிழ்ச்சி அடைகிறதாகவும், அதற்காக டெல்லி மெட்ரோ நல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது என கூறினார். மேலும், மெட்ரோ பயணத்தின் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் பயணிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, கொரோனா பரவல் காரணமாக, 169 நாட்களுக்கு பின், அன்லாக் 4- ன் ஒரு பகுதியாக, மெட்ரோ சேவைகள் நேற்று காலை முதல் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரயிலில் பயணிகள் இருக்கைகளில் அமர அல்லது நிற்க, ஒரு மீட்டர் இடைவெளியைப் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…