டெல்லியில் வினய் தாஹியா என்பவரை 4 சுட்டு கொன்றுள்ளனர். மனைவி கிரண் தாஹியாவுக்கு 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் வெங்கடேஸ்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுடெல்லி துவாரகாவின் அம்பர்ஹாய் கிராமத்தில் வசிக்கும் தம்பதி வினய் தாஹியா(23)-கிரண் தாஹியா(19). இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஹரியானாவின் சோனிப்பேட்டை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த வருடம் குடும்பத்தினருக்கு எதிராக ஓடிவந்துள்ளனர். பின்னர் புதுடெல்லி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தாஹியா சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், அவரது மனைவிக்கும் 5 குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து இரவு 9 மணியளவில் துவாரகா செக்ட்டர்-23 காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை குறித்து துவாரகா துணை போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் மீனா தெரிவித்துள்ளதாவது, வினய் தாஹியா மற்றும் அவரது மனைவி கிரண் தாஹியா இருவரையும் அவர்கள் வசிக்கும் வாடகை வீட்டில் 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டனர். வினய் தாஹியாவுக்கு 4 புல்லட் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், கிரண் தாஹியாவுக்கு 5 புல்லட் பாய்ந்துள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…