டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதை , டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 130க்கும் இறப்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றியை பதிவு செய்தது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 மற்றும் மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லி மாநில தேர்தல் ஆணையம் (டிஎஸ்இசி) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நோட்டாவுக்கு 8,000 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து வார்டுகளிலும் போட்டியிடாத பல அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட இந்த ஆண்டு நோட்டாவுக்குப் பதிவான ஒட்டுமொத்த வாக்குகள் அதிகம் என கூறியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…