கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளதால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் துணிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறப்பதற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மளமளவென பரவிய தீயால் அந்த கடையில் இருந்த துணிகள் அனைத்தும் எரிந்து நாசம் அடைந்ததோடு அருகிலிருந்த கடைகளுக்கும் தீ பரவ தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி பெரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தண்ணீரை பீச்சி அடித்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை பரவ விடாமல் தடுத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அருகில் இருந்த ஐந்து கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது. ஆனால் இவற்றின் மூலமாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…