கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளதால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் துணிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறப்பதற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மளமளவென பரவிய தீயால் அந்த கடையில் இருந்த துணிகள் அனைத்தும் எரிந்து நாசம் அடைந்ததோடு அருகிலிருந்த கடைகளுக்கும் தீ பரவ தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி பெரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தண்ணீரை பீச்சி அடித்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை பரவ விடாமல் தடுத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அருகில் இருந்த ஐந்து கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது. ஆனால் இவற்றின் மூலமாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…