வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மது விற்கப்பட்டது தொடர்பாக, டெல்லி தனியார் ஓட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்படடுகள் விதிக்கப்பட்டு, கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் முக்கியமாக, டெல்லி, ஓட்டல், பார்களில் மது வழங்க அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதனை மீறி, சட்ட விரோதமாக சில ஓட்டல்களில் மதுபானம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பவன் தஹியா தலைமையில் துவாரகாவின் 7வது பிரிவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சோதனை நடத்தபட்டது. அங்கு வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மது விற்கப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த ஓட்டலின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அவர்மீது, சட்ட விரோதமாக மது விற்றல், நோய் தொற்று பரப்புதல், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…