கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை குறைக்க டெல்லி அரசு மேற்கொண்ட முயற்சி.
இந்தியா முழுவதும் ககொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், 10 பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைகளில் அதிக இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.
டெல்லியில் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதலமைச்சர் சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இந்த குழுக்கள், கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் மற்றும் வைரஸ் பரவுவது குறித்த அறிக்கைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சமர்ப்பித்துள்ளன.
அதிகமான கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆய்வு செய்ய, ஜூலை மாதம் டெல்லியில் 10 மருத்துவமனைகளை கண்காணிக்கும் குழுக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
சோதனைகளின் போது, முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது அனைத்து மருத்துவமனைகளிலும் இறப்பு விகிதம் குறைந்துவிட்டதாக இந்த குழுக்கள் கண்டறிந்துள்ளன என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், முதல்வர் கெஜ்ரிவால், சுகாதாரத் துறைகளும், குழுவும் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியத்திற்குக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…