டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடி

Published by
Kaliraj

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  உச்சத்தை தொட்டு வருகிறது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் மட்டும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  20 பேருக்கு மேல் பயணம் பேருந்துகளில் செய்யக் கூடாது என்று டெல்லி அரசு அண்மையில் அறிவித்திருந்தது.இவ்வறிவிப்பினால்  பேருந்துகளை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.இந்நிலையில் இதனைக் கருத்தில் கொண்ட டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்  தனது டுவிட்டர் பக்கத்தில்  நவம்பர் 1ஆம் தேதி(இன்று) முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்தே செல்லலாம் என்று அறிவித்துள்ளார். ஆனால் யாரும் பேருந்துகளில் நின்றபடி செல்வதற்கு அனுமதி இல்லை கிடையாது என்று கூறியுள்ளார்.மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பதிவிட்டு அறிவுறுத்தியுள்ளார்.
Published by
Kaliraj

Recent Posts

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…

2 hours ago

சம்பளத்தை விட அதிகமாக அபராதம் கட்டுகிறாரா திக்வேஷ் ரதி? உண்மை என்ன?

லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…

2 hours ago

வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!

டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…

4 hours ago

இல்லாத அளவிற்கு உயர்ந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி! முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…

5 hours ago

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

7 hours ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

7 hours ago