டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதி.
டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களை கைப்பற்றிய நிலையில், பாஜக தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதாவது, டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில், ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று, 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுபோன்று, பாஜக 85 வார்டுகளில் வெற்றி பெற்று, 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 5-ல் வெற்றி, 5-ல் முன்னிலை, சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 3-ல் முன்னிலை பெற்றுள்ளனர்.
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், கிட்டத்தட்ட டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம் வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…