தலைநகரை ஆளப்போவது யார்…துவங்கியது வாக்கு எண்ணிக்கை… 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்…

Published by
Kaliraj
  • டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 முதல் சுமார் 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லிக்கு  சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. இங்கு பதிவான வாக்குகள் 22 வாக்கு எண்ணும் மையங்களில் நடக்கிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் மதியத்திற்குள் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். இந்த தேர்தலில், ஆளும் ஆம்ஆத்மி, காங்கிர்ஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவுகள் மூலம் யார் உண்மையில் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
Kaliraj

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago