106 கிலோ எடையுள்ள பெண்ணின் வயிற்றில் இருந்து 50 கிலோ எடையுள்ள கட்டியை மூன்று மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றியுள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் 52வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 50 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். கடந்த சில மாதங்களாக 106 கிலோ எடையாக இருந்த அந்த பெண்ணிற்கு கடுமையான வயிற்றுவலி, உடல்எடை அதிகரிப்பு, சுவாசக்கோளாறு மற்றும் நடக்கவும், தூங்கவும் இயலாமல் அவதிப்பட, அப்போலோ மருத்துவமனையில் சோதித்து பார்த்த போது அவரது கருப்பையில் கட்டி ஒன்று வளர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 18 அன்று டாக்டர் அருண்பிரசாத் தலைமையில் நடைபெற்றது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 50 கிலோ எடையுள்ள கருப்பை கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து அருண்பிரசாத் கூறுகையில், 50கிலோ எடையுள்ள கட்டியை அகற்றுவது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது என்றும், அவருக்கு ஹூமோகுளோபின் அளவு குறைந்து இருந்ததால் ஆபரேஷனுக்கு முன்னும், பின்னும் 6 யூனிட் இரத்தம் செலுத்தப்பட்டது. பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த அறுவைசிகிச்சைக்கு பின் அப்பெண்ணில் உடல்எடை 56 கிலோவாக குறைந்துள்ளது என்றும், கட்டி வளர்ந்து விட்டால் மற்ற உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் இருந்ததால் விரைவில் ஆபிரேஷன் நடத்த பரிந்துரைக்கப்பட்டது என்றும், உடலில் எந்த பிரச்சனையும் இல்லாததால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…