Categories: இந்தியா

3 மாணவர்கள் உயிரிழப்பு.! 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்.! தீவிரமடைந்த போராட்டம்…

Published by
மணிகண்டன்

டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட மழைநீர் வெள்ளத்தில், பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் தானியா சோனி (வயது 25), ஸ்ரேயா யாதவ் (வயது 25) மற்றும் நவீன் டெல்வின் (வயது 28) ஆகிய மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான அனுமதி அளித்த அரசு அதிகாரிகள், கட்டிட உரிமையாளர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தனியார் பயிற்சி மையம் முன்பு ஐஏஎஸ் பயிற்சி பெரும் மாணவர்கள் பலர் நேற்று முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக,  தனியார் ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர், அதன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், டெல்லியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்த ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர்.

இதுவரை டெல்லி ராஜிந்தர் நகரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் 13 ஐஏஎஸ் மையங்களில் , சட்ட விரோதமாக அடித்தளத்தில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த உயிரிழப்பு விவகாரம் இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

2 hours ago
வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

3 hours ago
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

4 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

5 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

5 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

6 hours ago