Categories: இந்தியா

3 மாணவர்கள் உயிரிழப்பு.! 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்.! தீவிரமடைந்த போராட்டம்…

Published by
மணிகண்டன்

டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட மழைநீர் வெள்ளத்தில், பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் தானியா சோனி (வயது 25), ஸ்ரேயா யாதவ் (வயது 25) மற்றும் நவீன் டெல்வின் (வயது 28) ஆகிய மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான அனுமதி அளித்த அரசு அதிகாரிகள், கட்டிட உரிமையாளர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தனியார் பயிற்சி மையம் முன்பு ஐஏஎஸ் பயிற்சி பெரும் மாணவர்கள் பலர் நேற்று முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக,  தனியார் ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர், அதன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், டெல்லியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்த ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர்.

இதுவரை டெல்லி ராஜிந்தர் நகரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் 13 ஐஏஎஸ் மையங்களில் , சட்ட விரோதமாக அடித்தளத்தில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த உயிரிழப்பு விவகாரம் இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago