டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1.5 விகிதம் குறைந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,டெல்லியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தது.இதனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ படுக்கைகள் போன்றவைகளில் பற்றாக்குறை ஏற்பட்டது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து காணப்பட்டது.
இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அமலில் இருந்தது,இதனையடுத்து,மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில்,கொரோனா பாதிப்பு குறித்து தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,”டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.அதாவது,கொரோனா தொற்று விகிதம் 1.53 விழுக்காடாக குறைந்துள்ளது.எனினும்,கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,072 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…