#Breaking:திங்கள் முதல் கட்டுமானத் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி-டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

Published by
Edison

திங்கள் முதல் கட்டுமானத் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,டெல்லியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்தது.

இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி  முதல் மே 24 ஆம் தேதி வரை அமலில் இருந்தது, இதனையடுத்து,மே 31 ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையில்,ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில்,கொரோனா பாதிப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடந்த பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில்,திங்கள் முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில்,மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,”டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.அதாவது,கொரோனா தொற்று விகிதம் 1.53 விழுக்காடாக குறைந்துள்ளது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,072 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இருப்பினும்,அன்றாட கூலித் தொழிலாளர்களை மனதில் கொண்டு கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் திங்கள்கிழமை முதல் இயங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும்,நிபுணர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும்”,என்று கூறினார்.

 

Published by
Edison

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago