மகிழ்ச்சி செய்தி: முதல் முறையாக 1,000 க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

Default Image

டெல்லியில் கொரோனா 2 வது அலையில் முதல் முறையாக 1000 க்கும் கீழ் குறைந்தது புதிய கொரோனா பாதிப்பு!

கடந்த சில மாதங்களாக டெல்லியில் கொரோனா காட்டுத்தீ போல் பரவியதால், இறப்பு எண்ணிக்கை உச்சத்தை தாண்டியது, இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவற்றாலும் மக்கள் பலி ஆகி வந்தனர்.

இதனையடுத்து டெல்லி முதலமைச்சர் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முழுஊரடங்கை அமல்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் படிப்படியாக டெல்லியில் குறையத்தொடங்கியது.

மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மகிழ்ச்சி செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார், அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 900 ஆக பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது கொரோனா 2 வது அலை தொடங்கிய காலத்திலிருந்து முதல் முறையாக 1,000 க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் டெல்லியில் தற்போதுள்ள ஊரடங்கு மே 31 ஆம் தேதி காலை 5 மணிக்கு முடிவடைகிறது என்றும், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் டெல்லியில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
ManoThangaraj
putin
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji