பழமையான 40 லட்சம் வாகனன்ங்கள் கொண்ட பதிவெண்களை ரத்து செய்துவிட்டோம் என்று டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
டெல்லியில் அதிகளவு காற்று ஏற்படுகிறது.இந்தியாவிலே காற்று மாசு அதிமாக உள்ள மாநிலம் டெல்லி என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தான் மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் வாய்ந்த பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் ஆஜரான டெல்லி அரசு சார்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி சுட்டிக்காட்டிய 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்களை கொண்ட வாகனங்களை டெல்லி அரசு ரத்து செய்துவிட்டதாக கூறினார்.
இது மட்டுமல்லாமல் நவம்பர் 30 முதல் டிசம்பர் 30 வரை டெல்லிக்குள் நுழையும் ஒவ்வொரு சரக்கு வாகனங்களை அடையாளம் காண 13 நுழைவு வாயில்களிலும் ரேடியோ அதிர்வெண் கொண்ட சாதனம் பொருத்தப்பட உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தீர்ப்பு மாநிலத்திற்கு தேவை என்ற போதிலும் பதிவெண் ரத்தான வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர்.ஆனால் மாநிலத்தின் காற்று மாசுப்பாடு குறைய அரர எடுத்த இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் மக்கள்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…