நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் அவர்கள், பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடியை மீண்டும் வைக்க கோரி டெல்லி துணை முதல்வருக்கு கடிதம்.
இன்று நாடு முழுவதும் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று பல கட்சி தலைவர்களும் டெல்லி, சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாரதியாரின் சிலையில் கைத்தடி காணாமல் போயுள்ளது குறித்து எந்த தலைவர்களும் கவனிக்கவில்லை. மேலும், இதுகுறித்து அந்த சிலையை சுற்றி தூய்மைப்படுத்தக் கூடியவர்களிடம் கேட்ட போது, அந்த கைக்கம்பு சில வாரங்களாகவே காணாமல் போயுள்ளது. அதுகுறித்து யாரும் பதில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் அவர்கள், பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடியை மீண்டும் வைக்க கோரி டெல்லி துணை முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘பாரதியாரின் கைத்தடி காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டு, உடனடியாக புதிய கைத்தடியை வைக்க வேண்டும். வரும் நாட்களில் சிலையினுடைய பராமரிப்பை அரசு சிறப்பாக, முறையாக உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.’ என எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…
டெல்லி : 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு கொண்டு…
சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில்…
சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை…