டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் ..! வாக்குறுதிகளை வெளியிட்ட ஆம் ஆத்மி

Published by
Venu
  • டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
  • ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்   ஜனவரி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .வருகின்ற 21-ஆம் தேதி  மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதற்கு இடையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளை காண்போம்..

  • இலவச பேருந்து வசதிகள் மாணவர்களுக்கு செய்து தரப்படும்.அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் திட்டம் நீடிக்கும்.
  • டெல்லி அரசு பள்ளிகளில் தரமான கல்வி உறுதி செய்யப்படும்.ஒவ்வொரு குழந்தைக்கும்  உலகத்தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • 24 மணிநேர மின்விநியோகம் சீராக்கப்படும்.முதல் 200 யூனிட் மின்சாரத்துக்கு வழங்கப்பட்ட கட்டண விலக்கு நீடிக்கும்.
  • டெல்லி மக்களுக்கு வீடுதோறும் 24 மணிநேரமும் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.வீடுதோறும் வழங்கப்படும் 20.000 லிட்டர் குடிநீர் திட்டம் தொடரும்.
  • டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமாராக்கள் பொருத்தப்படும். பேருந்துகளில் பாதுகாவலா்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Published by
Venu

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

9 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

9 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

10 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

12 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

12 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

13 hours ago