அரசை விமர்சனம் செய்யும் பதிவுகளை நீக்குங்கள்… 52 பதிவுகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா 2வது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் பதிவுகளை  சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்து கொண்டியிருக்கின்றனர். இந்த சூழலை அரசு சரியாக கையாளவில்லை என்பதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அரசை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த தவறான செய்தி, பயத்தை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை நீக்க வேண்டும் என மத்திய கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய அரசு வைத்த கோரிக்கையின் படி தவறான தகவல் பரப்பிய ட்விட்டர் பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்திய அரசின் கோரிக்கை ஒரு சட்டபூர்வமானது. ட்விட்டர் மற்றும் உள்ளூர் விதிகள் கொண்டு பயனர்களின் பதிவுகள் தேடப்படும். அப்படி, அந்த பதிவு ட்விட்டர் விதிகளை மீறியிருந்தால், உடனடியாக ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என்றும் பதிவுகள் விதிகளுக்கு உட்பட்டு இருப்பினும், அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டத்துக்கு புறம்பாக இருந்தால் அந்தப் பதிவு இந்தியாவில் மட்டும் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதன்படி, தற்போது கொரோனா குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட 52 பேரின் ட்விட்டர் பதிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் தெலங்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் மோலோய் கதக், நடிகர் வினீத் குமார் சிங், இயக்குனர் வினோத் கப்ரி மற்றும் அவினாஷ் தாஸ் உள்ளிட்டோரின் பதிவுகளும் அடங்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

45 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

48 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago