கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான ‘2 டிஜி’ மருந்தின் முதல் தொகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் முதல் தொகுப்பை இன்று காலை 10.30 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டனர்.
இந்த 2-டிஜி மருந்தினை டிஆர்டிஓவின் அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐஎன்எம்ஏஎஸ்) மற்றும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் மருந்தானது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.அதுமட்டுமல்லாமல்,துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது.இதனால்,ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைபடாது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அதாவது,இந்த 2-டி.ஜி. மருந்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் என வந்துள்ளது.மேலும்,இந்த பவுடர் வடிவிலான ‘2 டிஜி’ மருந்தினை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.எனவே,கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மருந்து மிகுந்த நன்மை பயக்கும்.
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…