மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து வசதிகளை தடை செய்துள்ளது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பேட்டியில் கூறியதாவது, மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மெட்ரோ சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல நகரங்களில் பெரும் வருமான இழப்பீடு மட்டுமில்லாமல் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரே சமயத்தில் அனைத்து நகரங்களிலும் மெட்ரோ சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும்,50 சதவீத பயணிகளை கொண்டே மெட்ரோ ரயில்கள் துவங்கப்படும். ஏனெனில் பயணிகளின் நெருக்கடியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மெட்ரோ சேவைகளை குறித்த இறுதி தீர்மானம் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய வழிமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் என்று ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…