பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 வழங்க முடிவு..!

Published by
murugan

அஸ்ஸாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு வகையான முன்முயற்சியாக, பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் வகுப்புகளில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு ரூ .100 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

12 ஆம் வகுப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் மாணவர்களுக்கு பிரக்யன் பாரதி யோஜனாவின் கீழ் இருசக்கர வாகனங்களை மாநில அரசு வழக்கும் என சர்மா கூறினார். இதற்காக மாநில அரசு ரூ.144.30 கோடியை செலவிடும் என தெரிவித்தார். இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டினாலும், முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாநில அரசு ஸ்கூட்டர்களை வழங்கும் என்று அவர் கூறினார்.

நடப்பு மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு ரூ .100 திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இருப்பினும், அதை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதி பாதிப்புகள் குறித்து எந்த தகவலையும் அவர் கொடுக்கவில்லை.  ரூ.1,500 மற்றும் ரூ .2,000 தொகை ஜனவரி இறுதிக்குள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்த தொகை புத்தகம் மற்றும் பிற பொருட்களை வாங்க உதவும் என்று அமைச்சர் கூறினார்.

நிதி ஊக்கத் திட்டம் இரண்டுமே கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட வேண்டும், ஆனால் கொரோனா பரவுவதால் தாமதமானது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Published by
murugan

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago