மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு..! சோகத்தில் பீகார்

Default Image

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு.

பீகார் மாநிலத்தில் கன மழையின் போது மின்னல் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு , மூன்று நாள்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பீகார் மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15 கால்நடைகளும் இறந்துள்ளன. இதை தொடர்ந்து இன்று 9பேர் இறந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 92 ஆக அதிகரித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிகபட்சமாக 13 பேர்  கோபால் கஞ்ச் பகுதியில் உயிரிழந்துள்ளார்கள், மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
suryakumar yadav vk orange cap
Omar Abdullah About Pahalgam Attack
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack