மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மகாராஷ்டிராவில் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பிப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட இந்த நபர் பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள யஷ்வந்த்ராவ் சவுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 52 வயதான இவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் இதுவே முதல்முறையாகும். நோயாளிக்கு கடந்த 13 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் பல மாநிலங்களில் ஓமைக்ரான் பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லியில் தான் அதிகமாக ஓமைக்ரான் பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஓமைக்ரான் பரவலுக்கு மத்தியில் மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதே நேரத்தில், நேற்று முதல் முதல் மும்பையில் 144 தடையை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…