ரோஹித் சர்மா மனைவி மற்றும் குழந்தை பற்றிய தவறான பதிவுகள்.! மகளிர் ஆணையம் கண்டனம்.!

Default Image

தோனி, கோலி மனைவி குழந்தைகளை சிலர் தவறாக கேலி செய்தது போல ரோஹித் ஷர்மா மனைவி குழந்தைகள் குறிவைக்கப்படுவதை டெல்லி மகளிர் ஆணைய தலைவி டிவிட்டரில் பகிர்ந்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

முன்னதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் மனைவி மற்றும் மகள் பற்றியும், இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர்  விராட் கோலியின் மனைவி மற்றும் மகள் பற்றி தவறான பதிவுகளை இணையத்தில் சிலர் பதிவிட்டது  சர்ச்சையானது.

தற்போது அதே போல இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனைவி மற்றும் குழந்தை பற்றி சிலர் தவறான கருத்துகளை இணையத்தில் பதிவிட்டதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து  டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில்,  ட்விட்டரில் விராட் கோலி மற்றும் தோனியின் மகள்கள் குறித்து கேவலமான கருத்துகளை சிலர் பதிவிட்டது போல, ரோஹித் ஷர்மா மனைவி மற்றும் மகளும் தற்போது இந்த சிலரால் குறிவைக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டு, டெல்லி காவல்துறை மற்றும் மும்பை காவல்துறையை டேக் செய்து, “என்ன நடக்கிறது?” என ஸ்வாதி மாலிவால் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்